வி.ஜி.பி. தங்கக் கடற்கரையிலிருந்து பாலியல் தொழிலாளிகள் மீட்பு.

கடந்த ஆகஸ்ட் 7, வியாழன் அன்று சென்னை, விபச்சார தடுப்பு காவல்துறையினருக்கு சிட்லபாக்கத்தை சேர்ந்த பூங்கா வெங்கடேசன் என்பவர் அண்டை மாநிலங்களில் இருந்து பெண்களை கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் நீலாங்கரை பகுதியில் ஒரு மாருதி 800 வாகனத்தை சோதனை செய்ததில் பாலியல் தொழிலாளிகளான இரண்டு பெண்களும், திருப்பதி – சொர்லகுண்டா பகுதியைச் சேர்ந்த மணி என்ற குமார் மற்றும் கேரள மாநிலம் முன்னாரைச் சேர்ந்த ஜோஸப் ஆகிய இரண்டு பாலியல் தரகர்களும் சிக்கினர்.

இவர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததில், அப்பெண்கள் இருவரும் ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டதாகவும், மேலும் இரண்டு பெண்கள் விஜிபி தங்கக் கடற்கரை உள்ளே உள்ள விடுதி ஒன்றில் இருப்பதாகவும் தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்தப் பெண்களையும் மீட்டு மைலாப்பூரில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். பாலியல் தரகர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். பூங்கா வெங்கடேசன் கடந்த 15 ஆண்டுகளாக பாலியல் தொழிலில் கோலோச்சி வருவதாக விசாரணையில் தெரிய வருகிறது. ஆந்திராவிற்கு பாதுகாப்பாக தப்பி சென்றுள்ள பூங்கா வெங்கடேசனை காவல்துறையினர் "வலைவீசி" தேடி வருகின்றனர்.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

நாம் அறிந்தவரை இந்தச் செய்தி வேறு எந்த செய்தி தாளிலும், இதழிலும் முழுமையாக வெளியாகவில்லை. வெளியான சில இதழ்களிலும் வி.ஜி.பி. நிறுவனத்தின் பெயருக்கு பதிலாக ஒரு தனியார் விடுதி என்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்படும் பாலியல் தொழிலாளிகளின் புகைப்படத்தை வெளியிடக்கூடாது என்ற நீதிமன்ற கண்டிப்பு காரணமாக இந்த செய்தியை செய்தித்துறையினர் முழுமையாகவோ, பகுதியாகவோ புறக்கணித்திருக்கலாம் என்று பலரும் நினைக்கலாம்.

ஆனால், அந்தப் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடம்தான், பல செய்தி நிறுவனங்கள் இந்த செய்தியை புறக்கணிக்க காரணமாக இருக்கிறது என்பதே உண்மை. வி.ஜி.பி. நிறுவனம் என்பது உழைப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. "உழைத்தால் உயரலாம்" என்ற மந்திர ஸ்லோகத்தை நடைமுறையில் நிரூபித்த-நிரூபிக்கும் நிறுவனமாக அந்த நிறுவனம் மீடியா உலகத்தால் கட்டமைக்கப் பட்டுள்ளது. அதை மேலும் காப்பாற்றும் விதமாக - உலக அமைதி ஆலயம், மேலாண்மை பயிற்சி மையம், மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை விஜிபி நிறுவனம் நடத்தி வருகிறது.

இத்தகைய பெருமைக்குரிய ஒரு நிறுவனத்தை பாலியல் தொழிலோடு தொடர்பு படுத்துவதில் நமது மீடியா முதலாளிகளுக்கு உள்ள சிக்கல்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள செய்தியை வெளியிடுவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. பாலியல் தொழில், மனித குல வரலாற்றில் வேட்டை மற்றும் உழவுக்கு அடுத்து மிகவும் புராதனமான தொழிலாக கருதப்படுகிறது. பல நாடுகளில் பாலியல் சட்டரீதியான தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களின் சில பகுதிகளில் பாலியல் தொழில் சட்டரீதியாகவே அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

பாலியல் தொழிலை கட்டுப்படுத்தும் சட்டங்களை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று மிகப்பரவலாக விவாதங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் பாலியல் தொழில் குறித்த விவாதங்களை சற்று தள்ளிவைத்துவிட்டு பார்த்தால், தொழிலதிபர்கள் குறித்து சமூகத்தில் கட்டமைக்கப்படும் பிம்பங்களே விவாதத்துக்கு உரிய அம்சமாகின்றது.

வி.ஜி.பி நிறுவனத்தினர் கடும் உழைப்புக்கு மட்டுமன்றி தமிழுக்கும் பெரும் தொண்டு செய்வதாக கூறப்படுகிறது. தமிழ்க் கவிஞர்களை விமானத்திலும், கப்பலிலும் ஏற்றி ஆழ்கடலின் மேல் மிதந்து கொண்டும், விண்வெளியில் பறந்து கொண்டும் கவியரங்கம் நடத்தி தமிழ் வளர்க்கும் கோமான்களாக இவர்கள் போற்றப்படுகின்றனர். குறுகிய காலத்தில் அதிக அளவில் கவிதைகளை எழுதும் திறன் படைத்த கவிச்சக்கரவர்த்திகளாக உருவகப்படுத்தப் படுகின்றனர். மதங்கடந்த ஆன்மிகவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்.

இத்தகைய முகமூடிகள் ஏதோ வி.ஜி.பி. நிறுவனத்துக்கு மட்டுமே அணிவிக்கப்படுவதில்லை. ஏறத்தாழ அனைத்து வணிக உலக பெரும்புள்ளிகளுக்கும் இத்தகைய முகமூடிகள் அணிவிக்கப்படுகின்றன. இந்த முகமூடிகள்தான் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பத்திரிகைகள் ஆகியவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் வள்ளல்களாக திகழ்கின்றனர். எனவே இவர்களை பகைத்துக் கொள்வதை அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ, பத்திரிகைகளோ விரும்புவதில்லை. எனவே இந்த முகமூடி மனிதர்களின் தவறுகள் அனைத்தும் மூடிமறைக்கப் படுகின்றன. அது இயலாத இடங்களில் திசைதிருப்பப் படுகின்றன. அதன் பிரதிபலனாக முகமூடி மனிதர்களின் இன்பக் கொண்டாட்டங்களில் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், செய்தி நிறுவன அதிபர்களுக்கும் பங்கும் கிடைக்கிறது.

இந்த முகமூடி மனிதர்களின் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் உரிமைகள் குறித்தோ, இந்த நிறுவனங்களின் சமூகக் கடமைகள் குறித்தோ, இந்த நிறுவன தயாரிப்பு மற்றும் சேவையை பயன்படுத்தும் நுகர்வோரின் உரிமைகள் குறித்தோ பத்திரிகைகள் வாய்திறப்பதில்லை. அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ அவர்களுடைய பங்கை பெற்றுக்கொண்டு அமைதியாக இருந்துவிடுகின்றனர்.


மேற்கூறப்பட்ட சம்பவத்தில் சில கேள்விகள் எழுகின்றன.

1. பாலியல் தொழில் செய்த பெண்கள் எத்தனை நாளாக வி.ஜி.பி. விடுதியி்ல் இருந்தனர்?
2. அவர்களை அங்கே தங்க வைத்தது யார்?
3. அவர்கள் பாலியல் தொழிலாளர்கள் என்பது வி.ஜி.பி. நிர்வாகத்தினருக்கு தெரியவே தெரியாதா?
4. அவர்கள் பாலியல் தொழிலாளர்கள் என்பது வி.ஜி.பி. நிர்வாகத்தினருக்கு தெரிந்தும் வைத்திருந்தார்கள் என்றால், அவர்களுக்கு யார் தண்டனை வழங்குவது?
5. 15 வருடங்களாக பாலியல் தரகராக கோலோச்சிவரும் பூங்கா வெங்கடேசனின் வெற்றி ரகசியம் என்ன? அவருடைய தொழில் பங்குதாரர்கள் யார்?

கேள்விகளுக்கு முடிவே இல்லை.

மேலும் கேள்வி கேட்க விரும்பும், கேள்விகளுக்கான பதிலை அளிக்க விரும்பும் நண்பர்கள் பின்னூட்டங்களில் தொடரலாம்....!

-பி. சுந்தரராஜன்

11 மறுமொழிகள்:

நுகர்வோர் நலன் said...

சோதனை 1 2 3

அகராதி said...

"அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா" என்று கவுண்டமணி ஸ்டைலில் சொல்லும் மக்களின் மனப்பாங்கே இதற்கெல்லாம் காரணம்.


இதுபோன்ற அத்துமீறல்களை கண்டாலும், கேட்டாலும் அது தங்களை பாதிக்காவி்ட்டாலும்கூட, அத்துமீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் துணிவு மக்களுக்கு வரும் வரையில் இதுபோன்ற அவலங்கள் தொடரவே செய்யும்.

Anonymous said...

வி.ஜி.பி. ஒரு பெரிய வணிக நிறுவனம். அதன் ஒரு பிரிவான தங்கும் விடுதியில் பல சுற்றுலாப் பயணிகள் தங்க வாய்ப்பு இருக்கிறது.
அதில் வெளி மாநிலத்தினரும் அடக்கம். அவர்களின் வருகையின் நோக்கம், அவர்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை வி.ஜி.பி நிறுவனம் துப்பறிய முடியுமா?

சிக்கிமுக்கி said...

அட, போலிப்பயல்களா!

Anonymous said...

//அகராதி said -அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று கவுண்டமணி ஸ்டைலில் சொல்லும் மக்களின் மனப்பாங்கே இதற்கெல்லாம் காரணம்.
இதுபோன்ற அத்துமீறல்களை கண்டாலும், கேட்டாலும் அது தங்களை பாதிக்காவி்ட்டாலும்கூட, அத்துமீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் துணிவு மக்களுக்கு வரும் வரையில் இதுபோன்ற அவலங்கள் தொடரவே செய்யும்.//

வழிமொழிகிறேன்.

M Poovannan said...

வி.ஜி.பி சகோதரர்கள் உழைப்பால் உய்ர்ந்தவர்கள் என யார் சொன்னது. தொடக்க காலத்தில் அவர்கள் செய்த தில்லுமுல்லு சென்னைமக்கள் அறிந்ததே. எடுத்துக்காட்டாக வி.ஜி.பி தவணை முறை திட்டம் கேள்விப்படிருப்பீர்கள், இத்திட்டத்தில் இவர்களின் டார்கெட் வறுமைகோட்டிற்கு கீழே இருப்பவர்கள். இவர்களிடம் ஆசை வார்த்தை காட்டி தவணை முறையில் சைக்கிள், ரேடியோ,தையல்மிஷின்,டேபிள் பேன் விற்று விடுவார்கள் (விற்கும் போது இவர்களுக்கு நன்றாகவே தெரியும் 3 தவ்ணைக்கு மேல் கட்ட முடியாதென்)கடைசியில் தவணை கட்டவில்லை என பொருளை ஜ்ப்தி செய்து கொண்டு வந்து அதே பொருளை சரி செய்து மற்றவர்களுக்கு விற்று விடுவார்கள். இது மட்டுமா சிங்கை மலேசியாவில் கோல்டன் பீச் ஷேர் வாங்கியவர்களுக்கு இதுவரை ஷேர் சர்டிபிகேட்டும் கொடுக்கப் படவில்லை ஷேர் டிவிடெண்டும் கொடுக்கப் படவில்லை

Anonymous said...

ஓ! இந்த கிரெடிட் கார்ட், பெர்சனல் லோன், வாகனக்கடன் மோசடிகளுக்கு முன்னோடியே வி.ஜி.பி.தானா?

Anonymous said...

அய்யா விஜிபி ஒன்னும் யோக்ய சிகாமணிகள் கிடையாதுதான். M Poovannan சொன்னதில், வி.ஜி.பன்னீர்செல்வம் NRI களை ஏமாற்றி காசு புடுங்குனதும் நானறிந்த உண்மை.

அதற்காக, அவர்களை இந்த குறிப்பிட்ட நிகழ்வில் எப்படி நேரடியாக சம்பந்தபடுத்த முடியும்?

ஒருவேளை அவர்களே பெண்கள் கடத்தல், பாலியல் உறவுக்கு ஏற்பாடு செய்வது போன்ற சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடாத வரை அவர்கள் மேல் குறை சொல்ல நியாயம் இல்லை.

பாலியல் தொழில் வரையறுக்கப்பட்டு, வெளிப்படையாக அனுமதிக்கப்பட வேண்டும். அப்போது தான் தரகர்கள் + அதிகார வர்க்க கூட்டுடன், பெண்களை, குறிப்பாக சிறுமிகளை, கடத்தி கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கொடுமை குறையலாம்.

நம்ம ஊரு பத்திரிக்கைகளின் 'நேர்மை' குறித்து நீங்கள் எழுப்பியுள்ள கேள்வி + காரணிகள் சரியே. பல்வேறு சந்தர்ப்பங்களில் பத்திரிக்கைகள் செய்துவரும் தகவல் மோசடி வெளிப்பட்டது உண்டு.

எதிர்மறை செய்திகளில் அடிபடும் நிறுவனங்கள் மட்டும் பத்திரிக்கைகட்கு (விளம்பர) படியளப்பவையாக இருந்துவிட்டால் போதும். உடனே அதன் நிஜ பெயர் மறைந்து 'ஒரு தனியார்' நிறுவனமாக ஆகிவிடும்.

குரங்கு said...

மிக நல்ல பதிவு...

இப்போது எந்த மீடியா நியாயமாக நடக்கிறது? எந்த பத்திரிக்கையாவது விருப்பு வெறுப்பு இல்லாமல் செய்திகள் வெளியிடுகின்றனவா?

பாலியல்... இது இல்லையென்றால் உலகமே இல்லை. இன்னும் நம் நாட்டில் பாவமான காரியமகவே பாக்க படிகிறது, இது மாற வேண்டும். கால காலமாக இருந்து வரும் தொழில் இதுவாகத்தான் இருக்கும். உலகத்தில் பாலியல் ஒழித்து விடவே முடியாது. ஆண்கள் இருக்கிறவரை பாலியல் தொழில் இருந்து கொண்டுதான் இருக்கும். பாலியல் தொழிலிலுக்கு சட்ட பூர்வமான அங்கிகாரம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் எய்ட்சை கட்டு படுத்த முடியும்.

suvanappiriyan said...

மிக நல்ல பதிவு...

david santos said...

Great work!!!
Congratulations.