கடன் பெறும் நுகர்வோருக்கு, கடன் ஒப்பந்த நகலை வங்கிகள் அளிக்க வேண்டும் - ரிசர்வ் வங்கி.

வங்கியில் கடன் பெறும் பலரும் கடன் பெறும் அவசரத்தில் அதற்கான விதிமுறைகளை தெரிந்து கொள்ள தவறிவிடுவது வழக்கமாகி வருகிறது. பின்னர் கடன் குறித்த விதிமுறைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்யும்போது வங்கிகளின் அலைக்கழிப்புக்கு ஆளாகவும் நேர்கிறது.
.
வங்கி நுகர்வோர்களின் இந்த பிரசினையை தீர்ப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி கடன் பெறும் நுகர்வோர் அனைவருக்கும் கடன் ஒப்பந்தத்தை கட்டாயமாக வங்கிகள் வழங்க வேண்டும் என்று சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 ஆகஸ்ட் 22ம் தேதி இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
.
RBI/2007-08/119
DBOD.No.Leg.BC.28/09.07.05/2007-0-8 ஆகஸ்ட் 22, 2007
அட்டவணைப்படுத்தப்பட்ட அனைத்து
வணிக வங்கிகள் / அகில இந்திய
நிதி நிறுவனங்கள் (பிராந்திய
கிராமப்புற வங்கிகள் நீங்கலாக)

அன்புடையீர்,

கடன் கொடுப்பவர்களுக்கான நியாயமான
பழக்கவழக்கங்களுக்கான நெறிமுறைகளுக்கு
வழிகாட்டுதல் – கடன் ஒப்பந்த நகல் அளித்தல்

எங்களின் 2003ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதியிட்ட சுற்றறிக்கை DBOD.leg.No.BC.104/09.07.002/2002-03ஐப் பார்க்கவும். கடன் கொடுப்பவர்களுக்கான நியாயமான பழக்கவழக்கங்களுக்கான நெறிமுறைகளை வகுப்பது பற்றி வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்கள்குக்கும் அதில் சொல்லியிருந்தோம்.

2. அச் சுற்றறிக்கை பத்தி 2(ii)(C)யின் படி, வங்கிகளும் நிதி நிறுவனங்களும், கடன் வசதி சம்பந்தப்பட்ட விதிமுறைகள் / வரையறைகள் ஆகியவைகளை வகுக்கும்போது, கடன் கொடுக்கும் நிறுவனம் கடன் வாங்குபவரிடம் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் சுருக்கமாக எழுதப்பட்டு வங்கி / நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற அதிகாரியால் கையொப்பமிடப்பட வேண்டும். இக் கடன் ஒப்பந்தத்தின் நகலையும், அதில் சொல்லப்பட்ட இணைப்புகளின் நகல்களையும் கடன் வாங்குபவருக்கு வங்கி நிறுவனம் அளிக்க வேண்டும் எனவும் அச் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

3. சில வங்கிகள், கடன் வாங்குபவர்கள் கேட்டால்தான் கடன் நகலைக் கொடுப்பதாக அறிகிறோம். கடன் ஒப்பந்த நகல், அதில் சொல்லபபட்ட இணைப்புகளின் நகல்கள் ஆகியவைகளைக் கொடுப்பாமல் இருப்பது ஒரு நியாயமற்ற பழக்க வழக்கமாகவே கருதப்படும். மேலும், வங்கிக்கும் கடன் வாங்கியவருக்கும் இடையே சச்சரவு / தகராறுகளை எழுப்பவும் இது வழி கோலும்.

4. எனவே கடன் ஒப்பந்த நகலையும் அதில் சொல்லப்பட்ட இணைப்புகளின் நகல்களையும், கடன் வாங்குபவர் அனைவருக்கும், கடன் அளிக்கப்படும் போதே, வங்கி / நிறுவனங்கள் கொடுக்க வேண்டும்.

அன்புடன்

பிரசாந்த் சரன்
தலைமைப் பொது மேலாளர் (பொறுப்பு)
.
கடன் ஒப்பந்த நகலைப் பெறும் வாடிக்கையாளர்கள் அதனை முழுமையாக படித்து புரி்ந்து கொண்டால் பல பிரசினைகளை தவிர்க்க முடியும்.
.
ரிசர்வ் வங்கியின் இணைய தளத்தின் சில பகுதிகள் தமிழிலும் கொடுக்கப் பட்டுள்ளது. அதனை படிப்பது வங்கி நுகர்வோர்கள் பலருக்கும் பயன் அளிக்கலாம்.
-ஆசிரியர் குழு

2 மறுமொழிகள்:

Anonymous said...

சற்றே காலதாமதமான பதிவு என்றாலும், எந்த காலத்திற்கும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.

தொடர்ந்து இதுபோன்ற பயனுள்ள தகவல்களை வழங்கவும்.

Anonymous said...

An excellent effort to spread consumer rights awareness. Keep it up.
(Sorry for posting the comments in English. As my system have problems in typing in the TamilEditor, I have put my comments in English)